Newsworld News National 0812 01 1081201021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா ஏற்கப்படவில்லை?

Advertiesment
புதுடெல்லி மும்பை பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா எம்கேநாராயணன்
, திங்கள், 1 டிசம்பர் 2008 (12:50 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய எம்.கே.நாராயணனின் ராஜினாமாவை பிரதமர் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலையடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று பதவி விலகினார். இதையடுத்து நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை உள்துறை அமைச்சராக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனும் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அதனை மறுத்துள்ள பிரதமர் அலுவலக அதிகாரி, தேசிய ஆலோசகர் பதவியில் எம்.கே.நாராயணன் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil