மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற வழிசெய்த முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங் காலமானார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் போக்கில் ஜெயப்பிரகாஷ் நாராயணனிற்குப் பிறகு, ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்த வி.பி. சிங், கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவுற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77. வி.பி.சிங்கிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.