தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட 8 இடங்களில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாஜ், டிரிடண்ட் ஓட்டலில் இன்னும் பதுங்கியுள்ள 5 தீவிரவாதிகளை வெளியே கொண்டுவர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு தேசிய பாதுகாப்பு படையினர் 200 பேர் உதவிக்காக வந்துள்ளனர்.
இதற்கிடையே, டிரிடண்ட் ஓட்டலில் இருந்த தப்பித்து ஓட முயன்ற 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.