மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த வேவ்வேறு மோதல்களில் தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் நேற்றுக் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் லாம்லியா என்ற இடத்தில் நேற்றிரவு அஸ்ஸாம் ரைஃபிள் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதே மாவட்டத்தில் லெய்மாபன் என்ற இடத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த மோதல்களின்போது எம்-16 துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.