Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொது‌த்துறை ஊ‌ழி‌ய‌ர்களு‌க்கு ஊ‌திய உய‌ர்வு : அமைர‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

பொது‌த்துறை ஊ‌ழி‌ய‌ர்களு‌க்கு ஊ‌திய உய‌ர்வு : அமைர‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!
, வெள்ளி, 21 நவம்பர் 2008 (01:49 IST)
மத்திய பொதுத்துறை நிறுவன ஊ‌ழிய‌ர்களு‌க்கு 01-01-2007 முதல் ஊ‌திய உயர்வு அளிக்க பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்கான அமைர‌ச்சரவை ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைம‌யி‌ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமை‌ச்சரவை‌க் குழு‌க் கூ‌ட்ட‌ம் ‌வியாழ‌க்‌கிழமை நட‌ந்தது.

இந்த‌க் கூட்டத்தில், 2-வது ஊ‌திய மறுசீரமைப்பு குழு அறிக்கையின் படி, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், மே‌ற்பா‌ர்வையாள‌ர்களு‌க்கு 01-01-2007 முதல் ஊ‌திய உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, 50 முதல் 300 ‌விழு‌க்காடு வரை அதிகாரிகளுக்கு ஊ‌திய உயர்வு கிடைக்கும். சராசரியாக 96 ‌விழு‌க்காடு ஊ‌திய உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil