Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 எம்.பி.க்கள் பதவி விலகல் ஏற்பு!

5 எம்.பி.க்கள் பதவி விலகல் ஏற்பு!
, செவ்வாய், 11 நவம்பர் 2008 (13:56 IST)
வட இந்தியர்கள் மீது மராட்டிய மாநிலத்தில் ராஜ் தாக்ரேயின் மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் 5 பேர் அளித்த பதவி விலகலை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஏற்றுக்கொண்டார்.

புது டெல்லியில் சோம்நாத் சாட்டர்ஜியை இன்று காலை சந்தித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பிரபுநாத் சிங், இத்தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

தங்களை பதவி விலக வேண்டாம் என்று சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு தாங்கள் இணங்க முடியாத நிலை உள்ளதாக அவரிடம் தெரிவித்ததாகவும் பிரபுநாத் சிங் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil