Publish Date: Tue, 28 Oct 2008 (23:25 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (23:25 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்து பேசினார்.
சுமார் 30 நிமிட நேரம் பேசிக்கொண்டு இருந்த இவர்கள், சமீபத்தில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த விவரத்தை, மன்மோகன்சிங், குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.