Newsworld News National 0810 14 1081014009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிமி தடை: அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்

Advertiesment
சிமி தடை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் மத்திய அரசு
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) மத்திய அரசு தடை விதித்ததை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிமி இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து அந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த ஆக.5-ம் தேதி சிமிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை எஸ்.பி.சின்ஹா மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோரை கொண்ட 2 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வந்தது. தற்போது 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சிடம் இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil