Publish Date: Wed, 01 Oct 2008 (21:03 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (21:03 IST)
மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கும் விதமாக சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.
ரயில்வே துறை நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5,500 கோடி செலவாகிறது. இந்த செலவை குறைக்க காற்றாலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துவங்கியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் இதற்காக பல்வேறு திட்டங்களில் ரூ.28 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 440 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், ரயில்வே அமைச்சக தலைமை அலுவலகம் ஆகிய முக்கிய இடங்களில் சூரிய ஒளி மின்சாரக் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ரயில்வே சார்பில் ரூ.60 கோடி செலவில் கன்னியாகுமரியில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 14 மைல் வேகத்தில் வீசும் காற்றை மின்சாரமாக மாற்ற முடியும் என்றும், ஒரு காற்றாலை மூலம் 300 வீடுகளில் விளக்கேற்ற முடியும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Wed, 01 Oct 2008 (21:03 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (21:03 IST)