Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் குண்டுவெடிப்பு: 13வயது சிறுவன் பலி!

டெல்லியில் குண்டுவெடிப்பு: 13வயது சிறுவன் பலி!
, சனி, 27 செப்டம்பர் 2008 (18:35 IST)
புதுடெல்லியில் மெஹ்ரவ்லி பூ சந்தை அருகேயுள்ள கடையில் இன்று நண்பகலில் குண்டு வெடித்தது. இதில் 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் டிபன்-பாக்ஸில் வெடிகுண்டை வைத்து விட்டுச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்களை மேற்கோள்காட்டி அச்செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த காவல்துறையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை முற்றுகையிட்டதுடன், மேலும் அப்பகுதியில் ஏதாவது குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil