தலைநகர் டெல்லியில் அண்மையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் 3 தீவிரவாதிகளின் 5 வரைபடங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். குண்டு வெடிப்புகளை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரையப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். இவர்களைப் பற்றித் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது....