Publish Date: Mon, 15 Sep 2008 (13:18 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (12:58 IST)
குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம், குடிமகன் அடையாள அட்டை தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.
அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கடுமையான தண்டனைகள் வழங்கவும், நீதியைக் காப்பாற்றவும் சட்டமியற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளேன் என்றார்.
புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடர் குண்ட வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் 'தேசிய குடிமகன் அடையாள அட்டை' கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்றார்.
புதுடெல்லியில் நடந்த இது போன்ற குண்டு வெடிப்பு நிகழ்வுகளை கண்டறிந்து தடுக்க பொதுமக்கள் ஒன்றினைந்து பாடுபடவேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்துல் கலாம் கூறினார்.