Publish Date: Fri, 12 Sep 2008 (15:25 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (15:25 IST)
பாகிஸ்தான் எல்லையில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் 2 லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாராவில் செளண்டிமார்ன் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது காட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இதில் லஷ்கர்- இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். மோதல் நடந்த இடத்தில் இரண்டு ஏ.கே. துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Webdunia
Publish Date: Fri, 12 Sep 2008 (15:25 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (15:25 IST)