Publish Date: Tue, 19 Aug 2008 (14:58 IST)
Updated Date: Tue, 19 Aug 2008 (14:58 IST)
தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் ஆதரவாளர்கள் இருவர் கேரளாவில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
வேலியத்துநாடு என்ற இடத்தில் இவர்கள் பதுங்கியிருந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து, நேற்று நள்ளிரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிடிபட்ட நபர்கள் இருவரும் அஷரப் அம்றும் அப்துல் ரகுமான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அருகில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு விராசணைக்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த மேலும் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் இரவுநேர ரோந்து சுற்றும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.