இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கார்ல்ஸ்பெர்க் கரைப்பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 12.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. எனினும் இதனால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.