நாட்டின் 62-வது சுதந்திர தினத்தையட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொலைக்காட்சியில் நாளை (14.08.2008) உரையாற்றுகிறார்.
இந்த உரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு இந்தி மொழியைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகும். இதே போல அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரவு 7 மணி முதல் ஒலிப்பரப்பாகும்.
இதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையின் மொழி பெயர்ப்பு அந்தந்த மாநில மொழிகளில் அகில இந்திய வானொலியின் மண்டல அலைவரிசைகளில் இரவு 9.30 மணிக்கு ஒலிப்பரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.