Publish Date: Fri, 08 Aug 2008 (21:24 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (21:24 IST)
அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 13 ஆம் தேதி முதல் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு (வி.எச்.பி.) அறிவித்துள்ளது.
"பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமர்நாத் கோயிலிற்கு மீண்டும் நிலம் வழங்குவது தொடர்பாக ஏதும் பேசப்படவில்லை. இது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அவமானமாகும்" என்று வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
"அமர்நாத் கோயிலிற்கு மீண்டும் நிலம் வழங்கும் அடிப்படையில் பேச்சு நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 13 ஆம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இதில் திரளாகப் பங்கேற்பார்கள்" என்றும் அவர் கூறினார்.