Publish Date: Thu, 24 Jul 2008 (15:34 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (15:33 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டத்தினிடையில் நடந்த குண்டு வெடிப்பில் புனித அமர்நாத் குகைக் கோயிலிற்கு செல்வதற்காக காத்திருந்த 5 பக்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டதினிடையில் இன்று பிற்பகல் மர்ம ஆசாமிகள் கையெறி குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தக் குண்டுகள் வெடித்ததில் அமர்நாத் செல்லக் காத்திருந்த ஒரு பெண், ஒரு குழந்தை ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பில் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.