Publish Date: Fri, 18 Jul 2008 (17:56 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவுள்ள நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக சிறு கட்சிகள் என்றும் பாராமல் ஐ.மு.கூ. ஆதரவைத் திரட்டி வரும் நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.பி. அரசை விமர்சித்து உள்ளதுடன், மாயாவதியை ஆதரித்துள்ளார்.
கர்நூல் தொகுதி எம்.பி. அரவிந்த் சர்மா, வாக்களிப்பது பற்றிய தனது இறுதி முடிவை ஜூலை 22 இல் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அறிவிப்பதாக கூறியுள்ளார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
"முலாயம் சிங், அமர்சிங் ஆகியோரின் ஆதரவைக் காங்கிரஸ் கட்சி பெற்ற விதம் எனக்கு வருத்தமளிக்கிறது. அதற்காக நான் பகுஜன் சமாஜ் கட்சியில் சேரப்போவதாக அர்த்தமள்ள. பாராட்டுமளவிற்கு மாயாவதிக்கு தகுதியுள்ளது" என்றார் அவர்.
Webdunia
Publish Date: Fri, 18 Jul 2008 (17:56 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)