Publish Date: Mon, 14 Jul 2008 (13:33 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (13:32 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று மேலும் 804 பக்தர்கள் பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 508 ஆண்கள், 173 பெண்கள், 23 குழந்தைகள், 100 சாதுக்கள் உள்ளிட்ட இந்த 804 பக்தர்களும் பல வாகனங்களில் இன்று அதிகாலை அமர்நாத் புறப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.