குடியரசுத் தலைவர் விடுத்த அழைப்பின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், மத்திய அரசிற்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதை அடுத்து, மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசு சிறுபான்மை நிலையை அடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.