Publish Date: Thu, 10 Jul 2008 (16:32 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
முலாயம் சிங் பதவி விலகியதை அடுத்து ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சி வெளியேறினாலும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி நீடிக்கும் என்றும், மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசிற்கு எதிராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சி வெளியேறியதால் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றார் சந்திரபாபு நாயுடு.
Webdunia
Publish Date: Thu, 10 Jul 2008 (16:32 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)