Publish Date: Wed, 18 Jun 2008 (17:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதக் குவியலைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏ.கே. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, கையெறி குண்டு, இரண்டு புத்தகங்கள் ஆகியவை அதில் அடக்கம் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் இந்த ஆயுதக் குவியல் கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.