Newsworld News National 0806 17 1080617014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டார்ஜிலிங்கில் முழு அடைப்பு! இயல்பு நிலை பாதிப்பு!

Advertiesment
கூர்க்கா லேண்ட் தனி மாநிலம் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா சில்லிகுரி காங்க்டாக் டார்ஜிலிங்
கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிவரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா நடத்திவரும் முழு அடைப்பால் டார்ஜிலிங் மாவட்டத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் இந்த முழு அடைப்பு - வேலை நிறுத்தத்தால் சில்லிகுரியையும், சிக்கிம் தலை நகர் காங்க்டாக்கையும் இணைக்கும் தேச நெடுஞ்சாலை 31ஏ-யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கிம் மாநிலம் தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்கிற்கும் இடையில் ஓடும் மலை இரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil