Publish Date: Sat, 14 Jun 2008 (10:51 IST)
Updated Date: Sat, 14 Jun 2008 (10:51 IST)
மராட்டியத்தில் காவல் நிலையம் இடிந்து விழுந்ததில் மாநில ரிசர்வ் காவல் படையினர் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கிழக்கு மராட்டியத்தில் நக்சலைட்டுகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஃபுல்டி காவல் நிலையம்தான் இடிந்து விழுந்துள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாத் தொடர்ந்து பெய்துவரும் மழையால் இவ்விபத்து நடந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் கட்சிரோலி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.