Publish Date: Wed, 11 Jun 2008 (15:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் தனியார் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர்.
பலியானவர் விவரம் இரண்டாம் நிலைப் பொறியாளர் கே.ராஜேஷ் என்றும், இவ்விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
எம்.வி. பே ஐலாண்ட் என்ற அந்தக் கப்பலில் குளிர் சாதனக் கருவியை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.