கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் பங்கனகல்லியில் விஷ சாராயம் குடித்து மேலும் 4 பேர் இன்று உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம், கர்நாடகாவில் கடந்த சனிக்கிழமை வரை விஷ சாராயம் குடித்து 192 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இறச்சி சாப்பாட்டுடன் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் இறந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்த 28க்கும் அதிகமானவர்கள் ஷக்லிஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.