Publish Date: Wed, 21 May 2008 (12:40 IST)
Updated Date: Wed, 21 May 2008 (12:40 IST)
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா என்ற இடத்தில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 4- 5 நிமிடங்கள் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் உயிரிழப்போ,பொருளிழப்போ ஏற்படவில்லை. பர்தேவா பகுதியில் 3ஆவது முறையாக இந்த ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 7ம் தேதி ஆகிய தினங்களில் இதே போன்று மித நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.