ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினடன் நடந்த மோதலில் லஷ்கர்- இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அவன் பெயர் அப்துல் ரஹ்மான் என்ற ஜியா என்றும், அண்மையில் ஜம்முவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் அவனுக்குத் தொடர்புள்ளது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர்கள் கூறினர்.