Publish Date: Sat, 17 May 2008 (12:08 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சோடேபூரில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2ம் மாடியில் நடந்த வெல்டிங் வேலையால் தீப்படித்து கட்டிடம் முழுதும் பரவியது.
இதில் பலியானோர் எண்ணிக்கை முதலில் 7 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேலும் 5 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.