Publish Date: Mon, 05 May 2008 (12:09 IST)
Updated Date: Mon, 05 May 2008 (12:09 IST)
மாநிலங்களவை உறுப்பினர் நிர்மலா தேஷ்பாண்டேவின் மறைவுக்கு இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரத்தின் போது சமாஜ் வாடி கட்சி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன், வட இந்தியர்கள் பற்றி ராஜ் ராக்கரே கூறியது பற்றி பிரச்சனை எழுப்பினார்.
அப்போது, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் எர்ரன் நாயுடு ஒரு பிரச்சனை குறித்து பேச முற்பட்டபோது அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவை பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைத்தார்.
அவையில் அமளியில் ஈடுபட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை கண்டித்து நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இன்று மவுன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.