Publish Date: Mon, 14 Apr 2008 (11:53 IST)
Updated Date: Mon, 14 Apr 2008 (11:36 IST)
பீகாரில் 10 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும், 2 பேர் பா.ஜ.க. வையும் சேர்ந்தவர்கள்.
பீகாரில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக எல்லா அமைச்சர்களும் தங்களின் பதவியை விட்டு விலகியுள்ளனர். அமைச்சர்களும் யாரும் திருப்திகரமாகப் பணியாற்றவில்லை என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இவர்களின் பதவி விலகல் கடிதங்களை மாநில ஆளுநருக்கு முதல்வர் நிதிஷ் குமார் அனுப்பினார்.