Publish Date: Thu, 10 Apr 2008 (13:52 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (13:51 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பில், சிலி, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமடங்கள் நீடித்தது என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.