Publish Date: Fri, 21 Mar 2008 (11:14 IST)
Updated Date: Fri, 21 Mar 2008 (11:14 IST)
ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்துவரும் போர்ப் பயிற்சியில் நடந்த வெடி விபத்தில் 3 ராணுவத்தினர் பலியானதுடன், ஒரு அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து கூட்டுப் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்பயிற்சியில் ராணுவத்தினர் பயன்படுத்திய மோர்ட்டார் குண்டு இலக்கிற்கு முன்னதாக வெடித்துச் சிதறியது. இதில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும், இளநிலை அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் நமது ராணுவத்தினர் மேற்கொண்ட போர்ப் பயிற்சிகளில் இதுதான் மிகப்பெரியது என்பதும், இதைப் பார்வையிட அயல்நாடுகளில் இருந்து வல்லுநர்கள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Fri, 21 Mar 2008 (11:14 IST)
Updated Date: Fri, 21 Mar 2008 (11:14 IST)