Publish Date: Tue, 18 Mar 2008 (17:34 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:06 IST)
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், "சரப்ஜித் சிங்கை காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உரிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளதாக பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.