Publish Date: Mon, 25 Feb 2008 (17:34 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (17:33 IST)
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தையடுத்து பொது மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடினர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே மையம் கொண்டு இன்று நண்பகல் 12.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்போ, பொருள் சேதமோ குறித்து உடனடியாக எந்தவித தகவலும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.