Publish Date: Fri, 22 Feb 2008 (15:43 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (15:43 IST)
காஷ்மீரில் இன்று சுற்றுப் பயணம் மேற்கோண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கொல்லத் தீவிரவாதிகள் செய்த சதியை மத்திய ரிசர்வ் காவல் படையினர் முறியடித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா என்ற இடத்தில் பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
சோனியாவின் வருகையை முன்னிட்டு மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பதேர்வாவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவலர்கள் வருவதற்குள் தப்பி ஓடிவிட்ட அந்தத் தீவிரவாதிகள், சோனியா காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து 5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., 2 வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.