Publish Date: Thu, 21 Feb 2008 (14:28 IST)
Updated Date: Thu, 21 Feb 2008 (14:28 IST)
ஜம்மு- காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 முக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டத்தில் கூலிங்கம் என்ற வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்த போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்ததாகவும், இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 முக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் ஒருவனின் பெயர் பாஷா என்று தெரியவந்துள்ளது என்றும், மற்றவர்களின் விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடி மருந்து உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.