Publish Date: Fri, 15 Feb 2008 (11:06 IST)
Updated Date: Fri, 15 Feb 2008 (11:06 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் லஸ்கர் இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த 2 முக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமாவில் உள்ள மலைக் கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, இம்மோதல் நடந்ததாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன், லஸ்கர் இயக்கத்தின் மாவட்டத் தளபதி ரஹ்மான் பாய் என்றும், மற்றொருவன் பெயர் மோசின் என்றும் அவர் கூறினார்.