Publish Date: Mon, 04 Feb 2008 (13:45 IST)
Updated Date: Mon, 04 Feb 2008 (12:51 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்ததுடன், இங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களைக் கைப்பற்றியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மஹோரே என்ற பகுதியில் மறைவிடம் அமைந்திருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 10 கிலோ ஆர்.டி.எக்ஸ், வெடிகுண்டுகள் ஆகியவையும் அடக்கம் என்றும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாரும் கைது செய்யப்படவில்லை.