Publish Date: Mon, 28 Jan 2008 (16:46 IST)
Updated Date: Thu, 06 Mar 2014 (21:35 IST)
மும்பையில் பள்ளி வேனில் பொருத்தியிருந்த இயற்கை எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 சிறுமிகள் பலியானதுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.
மிலட் நகர் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகவும், கொல்லப்பட்ட சிறுமிகள் 4 பேரும் ஓசிவாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் முடிந்தவுடன், மாணவிகளை அவர்களின் வீடுகளில் கொண்டுபோய் விடுவதற்காக, அப்பள்ளியின் வேனைத் தயார்படுத்தி உள்ளனர். மாணவிகள் ஏறியவுடன், ஓட்டுநர் வேனை இயக்கியபோது எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்ததாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் காயமடைந்த மற்ற மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட உள்ளனர்.