Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் குற்றத்திற்கு பிணைய விடுதலை இல்லை?

Advertiesment
பாலியல் பலாத்காரம் மகாராஷ்ட்டிர அரசு புத்தாண்டு
, வியாழன், 24 ஜனவரி 2008 (12:21 IST)
பாலியல் பலாத்காரங்களை பிணைய விடுதலை இல்லாத குற்றங்களின் கீழ் கொண்டுவர மகாராஷ்ட்டிர அரசு முடிவு செய்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று நடந்த பாலியல் பலாத்காரம், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க மகாராஷ்ட்டிர அரசு கடும் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

"பாலியல் குற்றவாளிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் வகையில் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து மாநில சட்டம் மற்றும் நீதித்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த பரிந்துரை மீது மத்திய அரசின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. மேலும் இந்த குற்றத்திற்கான சிறை தண்டனையை ஓரு ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டாக உயர்த்தவும், ஜாமின் மறுக்கும் குற்றமாக்கவும் பரிந்துரைத்துள்ளோம்," என்று அம்மாநில துணை முதல்வர் பாட்டில் கூறுனார்.

இதுகுறுத்து மாநில பெண்கள் ஆணையமும் மத்திய அரசை வலியுறுத்த உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil