Publish Date: Mon, 24 Dec 2007 (17:44 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (17:43 IST)
கோவா தபோலிம் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற கடற்படை விமானம் ஒன்று எதிர்பாராமல் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தை இயக்கிய விமானி ஜானக் பெவாலி அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.
பொது விமானங்கள் இயக்கம் இல்லாத நேரமான காலை 11 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக விமான நிலைய ஆணைய இயக்குநர் பால் மாணிக்கம் தெரிவித்தார்.
தபோலிம் விமான நிலையம் கடற்படையின் ஹன்சா பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் காலை 8 மணி முதல் 11 மணி வரை பொது விமானங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.