உத்தரபிரதேசத்தில் நிலவும் கடுங்குளிருக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து பலியோனார் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலியானவர்கள் 8 பேரும் மெய்ன்புரி, ஜான்பூர், கெளசாம்பி, சான்ட் கபீர்நகர், பிரதாப் கார்க் மற்றும் பெரெலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாநிலத்தில் மிகவும் குறைவான வெப்பநிலை சுல்தான்பூரில் பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கு குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 5.7 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.
அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் வெப்பத்திற்காக தீ வளர்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.