Publish Date: Thu, 29 Nov 2007 (18:00 IST)
Updated Date: Thu, 29 Nov 2007 (18:00 IST)
தாங்கள் எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சனைகளில் மத்திய அரசு சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி மாநிலங்களவையில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
மாநிலங்களவை இன்று காலை கூடிய சில நிமிடங்களில் எழுந்த பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ.க. எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சனைகளில் மத்திய அரசு அளித்துள்ள பதில்கள் தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவே மத்திய அரசைக் கண்டித்து இன்று நாள் முழுவதும் அவையைப் புறக்கணிக்கிறோம்'' என்றார்.
இதையடுத்து பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேறினர்.
கடந்த சில நாட்களாக தஸ்லிமா நஸ்ரீன் கொல்கத்தாவில் இருந்து வெளியேறிய விவகாரம், எய்ம்ஸ் சட்ட திருத்த விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளில் பா.ஜ.க. அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Thu, 29 Nov 2007 (18:00 IST)
Updated Date: Thu, 29 Nov 2007 (18:00 IST)