Publish Date: Sun, 25 Nov 2007 (14:10 IST)
Updated Date: Sun, 25 Nov 2007 (13:18 IST)
உகாண்டாவில் நடந்த காமன்வெல்த் கூட்டமைப்பில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் மன்மோகன் சிங் இன்று இந்தியா திரும்பினார்.
மூன்று நாட்கள் உகாண்டாவில் தங்கியிருந்த பிரதமா மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமா கோர்டன் பிரவுன், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியாவின் வேட்பாளரான கமலேஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டது பிரதமர் பயணத்தின் சிறப்பம்சமாகும்.
இந்த கூட்டமைப்பை இங்கிலாந்து ராணி எலிசபெத் 2 கடந்த 23ஆம் தேதி துவக்கி வைத்தார்.