Publish Date: Fri, 23 Nov 2007 (13:07 IST)
Updated Date: Fri, 23 Nov 2007 (13:07 IST)
காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் விரைவில் ஜனநாயகம் திரும்பும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடந்த காமன்வெல்த் நாடுகள் அயலுறவுஅமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சார்னா, ''பாகிஸ்தானில் நிலையான அரசியல் சூழல் விரைவில் உருவாகி ஜனநாயகம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.