Publish Date: Wed, 31 Oct 2007 (10:53 IST)
Updated Date: Wed, 31 Oct 2007 (10:52 IST)
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 23-வது நினைவுநாள் நாடுமுழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லியில் இந்திரா காந்தியின் சமாதி அமைந்திருக்கும் சக்தி ஸ்தலத்தில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.