Publish Date: Tue, 25 Sep 2007 (18:54 IST)
Updated Date: Tue, 25 Sep 2007 (18:54 IST)
புதுவை மாநிலததில் அமைந்துள்ள ஒழுகரை நகராட்சி கூட்டத்தில் இருந்து இந்திய கம்யூனில்ட் கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று ஒழுகரை நகராட்சி கூட்டம், இதன் தலைவர் என்.எஸ். ஜெயபால் தலைமையில் நடந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நான்கு நகராட்சி உறுப்பினர்கள் எழுந்து உள்ளாட்சி துறை இயக்குநர் வல்லபனை எதிர்த்து கோஷமிட்டனர். அதற்குப் பின் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம், அவர்கள் முன் வைத்த கோரிக்கை மீது வல்லபன் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.