Publish Date: Wed, 01 Aug 2007 (15:06 IST)
Updated Date: Wed, 01 Aug 2007 (15:05 IST)
தேரா சச்சா சவுதா மதத் தலைவர் பாபா குர்மீத் ராம் சிங் மீது மத்திய புலனாய்வுக் கழகம் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், பத்திரிக்கையாளர் ராம் சந்தர் ஆகியோரது கொலை வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்கு ஒன்றிலும் தேரா சச்சா சவுதா மதத் தலைவர் பாபா குர்மீத் சிங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய புலனாய்வு கழக வழக்கறிஞர் ராஜன் குப்தா தெரிவித்தார்.
இரண்டு கொலை வழக்கில் மேலும் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக குர்மீத் ராம் சிங்கிற்கு அம்பாலா நீதிமன்றம் தாக்கீது அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, குர்மீத் ராம் சிங் மீதான வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிபதிகள் அதேஷ் குமார், அஜய் லம்பா ஆகியோர் முன்னையில் தாக்கல் செய்யப்பட்டது.